கவிரவில பாடசாலைக்குக் கேட்போர் கூடம் அமைப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நிதியொதுக்கீடு







நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -


அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவிரவலை தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களின் நலன்கருதி கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக 75 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்தக்கட்டிடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 26 ஆம் திகதி கவிரவில பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , உதயகுமார் , எம்.ராமசாமி , அம்பகமுவ பிரதேசபையின் முன்னாள் தலைவர்களான ஜி.mmநகுலேஸ்வரன் , எம்.இரவீந்திரன் , அட்டன் நகரசபையின் முன்னாள் தலைவர் அ.நந்தகுமார் , அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுரேஸ்குமார் , ட்ரஸ்ட் நிறுவன அட்டன் இயக்குநர் அத்துலசேனாரத்த , சாமிமலை இணைப்பாளர் பாலசுந்தரம் உட்பட பாடசாலை நிருவாகத்தினரும் பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -