நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -
அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சாமிமலை கவிரவலை தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களின் நலன்கருதி கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக 75 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்தக்கட்டிடம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 26 ஆம் திகதி கவிரவில பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , உதயகுமார் , எம்.ராமசாமி , அம்பகமுவ பிரதேசபையின் முன்னாள் தலைவர்களான ஜி.mmநகுலேஸ்வரன் , எம்.இரவீந்திரன் , அட்டன் நகரசபையின் முன்னாள் தலைவர் அ.நந்தகுமார் , அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுரேஸ்குமார் , ட்ரஸ்ட் நிறுவன அட்டன் இயக்குநர் அத்துலசேனாரத்த , சாமிமலை இணைப்பாளர் பாலசுந்தரம் உட்பட பாடசாலை நிருவாகத்தினரும் பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் , மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , உதயகுமார் , எம்.ராமசாமி , அம்பகமுவ பிரதேசபையின் முன்னாள் தலைவர்களான ஜி.mmநகுலேஸ்வரன் , எம்.இரவீந்திரன் , அட்டன் நகரசபையின் முன்னாள் தலைவர் அ.நந்தகுமார் , அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுரேஸ்குமார் , ட்ரஸ்ட் நிறுவன அட்டன் இயக்குநர் அத்துலசேனாரத்த , சாமிமலை இணைப்பாளர் பாலசுந்தரம் உட்பட பாடசாலை நிருவாகத்தினரும் பெற்றோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.