பாறுக் ஷிஹான்-
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறும் எனவும் அத்துடன் மூன்றாம் நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் என கலைப்பீடாதிபதி அறிவித்துள்ளார்.
முதலாம் வருட மாணவர்களின் வரவேற்புபசார நிகழ்வில் (10.03.2017 மற்றும் 11.03.2017) ஏற்பட்ட அசாதாரண நிலமைகளின் காரணத்தினால் மூன்றாம் நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
மேற்படி அசாதாரண நிலமைகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த 22.03.2017 அன்று கலைப்பீடச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான கற்றற் செயற்பாடுகள் யாவும் எதிர்வரும் புதன்கிழமை (29.03.2017) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதனை கலைப்பீடாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 1 ம்.2ம் வருட மாணவர்களுக்கு வழமை போன்று ஏற்கனவே கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
