அதிகரித்து வரும் போதைவஸ்துப்பாவனை: சமூகத்திற்கு ஆபத்து

எச்.எம்.எம். பர்ஸான் -

ன்று நம் சமூகத்துக்கு மத்தியில் போதைவஸ்துப்பாவனையானது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே காணப்படுகின்றது. புனித இஸ்லாமிய மார்க்கம் தடுத், வன்மையாகக்கண்டித்த இந்த பாவமான காரியத்தை நம் சமூகத்திலிருக்கின்ற படித்தவர்கள், பாமரர்கள், பெரியவர்கள், சிறியோர்கள் எனப்பல தரப்பினரும் சர்வசாதாரணமாக நினைத்து இதற்கு அடிமைகளாகியுள்ளனர்.

இந்தப்பாவமான, மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவைப்பற்றி எத்தனையோ மார்க்க உபதேசங்கள், மாநாடுகள் போட்டும், அத்தோடு அரசாங்கம் இது தொடர்பிலான பல்வேறு பிரசாரங்கள், விழிப்புணர்வுகளை நடாத்தியும் நம் மனித சமூகத்தை விட்டு அகற்ற முடியாத நிலையே காணப்படுகின்றது. இதன் பாதிப்புக்கள் அறிந்திருந்தும் அதனை விட்டு தூரமாகுவோம் என்று கூட நினைப்பதுமில்லை.

இந்த அசிங்கமான நடத்தைகளால் குடும்பங்களில் பல்வேறுபட்ட பிரைச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. கணவன்-மனைவிக்கிடையே அதிகமான பிரச்சனைகளுக்கு மதுப்பாவனையும் காரணமாவதுடன், இறுதியில் விவாகரத்து என்ற நிலைக்கு வந்து பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையும் சீரழிகின்ற நிலையே காணப்படுகின்றது. அத்துடன், இல்லற வாழ்வும் சின்னாபின்னமாகின்றது.

மதுப்பாவனைக்கு அடிமையானவர்கள் தங்களுடைய சுயபுத்திகளை இழந்து, தான் எவ்வாறான நிலையில் இருக்கின்றேன் என்ற உணர்வற்றவர்களாக சிறுவர், பாலியல் துஸ்பிரயோகங்களிலும், பெண்கள் மீதான பலாத்காரங்களில் ஈடுபடுவதும் தினமும் நாம் கண்டு கொண்டே இருக்கின்றோம்.

முன்னர் சாராயம், கஞ்சா போன்றவை போதைப் பொருட்களாகக்காணப்பட்டாலும், இன்று நவீன போதைப்பொருளாக பல்வேறுபட்ட பொருட்கள் பாவனையாளர்களுக்கு மத்தியில் உபயோகிக்கப்படுகின்றது.

சுயபுத்தியை மழுங்கடிக்கின்ற, போதை இன்பத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பொரளாதாரம், சுய மரியாதையை போன்றவற்ற இழந்து, இறைவனின் தண்டனைகளை மறந்தவர்களாக இதற்கு அடிமைப்பட்டிருக்கிறார்கள். வீடுகளில் சிறுபிள்ளைகள் இருந்தால் அவர்களை கடைகளுக்கு அனுப்பி போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் பெற்றோர்களும் நம் சமூகத்தில் இல்லாமலில்லை.

இவ்வாறன செயற்பாடுகளின் காரணமாக எதையும் அறியாத அந்த சின்னஞ்சிறுசுகளும் இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகின்றது.

கட்டாயமாக பிள்ளைகளின் எதிர்கால வாழ்வைப்பற்றி அவசியம் சிந்திக்கக்கூடிய ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் சூழல் எவ்வாறுள்ளது? நம்முடைய பிள்ளைகள் யாரோடு தோழமை கொண்டுள்ளார்கள்? அவர்கள் எங்கே செல்கின்றார்கள் என்பன போன்ற விடயங்களில் நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அதே நேரம் இன்றைய இலத்திரனியல் உலகு போதைப்பொருள் பாவனையை ஊக்குவிக்கும் ஒரு தளமாக மாறியுள்ளதையும், ஊடகங்களும் ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருப்பதையும் நாம் மறக்க முடியாது. குறிப்பாக, சினிமா பார்க்கின்ற இளைஞர்கள் சினிமாவில் போதைப் பாவனைகள் எவ்வாறு பாவிக்கப்படுகின்றது? அதனை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பன போன்றவைகளை அச்சொட்டாகப் பின்பற்றுகிறார்கள்.

ஊடகச்செயற்பாடுகளும் இளம் தலைமுறையினரை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இத்தீய செயற்பாடு காரணமாக, இளவயதிலேயே பல்வேறு நோய்த்தாக்கங்களுக்குள்ளாகி மரணிக்கக் கூடிய நிலையையும் காண்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில், பெற்றோர்கள் மாத்திரமல்லாமல் சமூகத்திலுள்ள அரசியல் தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் எனப்பலதரப்பினரும் ஒன்றிணைந்து இந்தபோதைவஸ்துப் பாவனையை இல்லாதொழிக்க பாடுபட வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால் தான் நாம் எதிர்காலத்தில் ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட நல்ல பண்பாடுள்ள சமூகத்தை உருவாக்கலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -