முகம்மட் நிரெளாஸ்-
அப்பனை மரத்தின் கீழ்தான்
அப்பனை சுட்டுக் கொன்றார்
கொப்பரின் சாவின் பின்னால்
கற்-பனைகள் கலைஞ்சு போச்சு.
செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஷெல்லிலே காயப் பட்டான்.
செல்லாத இடங்கள் இல்லை
சொல்லாத மந்திரம் இல்லை.
கண்ணி வெடிகளினால்
கண்ணீரில் கலந்த வழ்க்கை
இன்னும் மாறவில்லை
இவர்க்கு யாருமில்லை
சாவடிச் சோதனையில்
சாவடித்த வாழ்க்கை இன்னும்
காவடியாய் ஆடுகிறது
நோவு பட்ட மக்கள் மனதில்
ஈழமென்றார் இல்லையென்றார்
யாராரோ சண்டை இட்டார்
ஓலம்தான் மிஞ்சியது
ஒன்றுமறியா மக்களுக்கு
ஆயுதச் சண்டையினால்
ஆயிரம் உயிர்கள் போச்சு
பேயாட்டம் போட்ட அந்த
பிரச்சினை மீண்டும் வேண்டாம்.
பூச்சு வார்த்தை இன்றி
பேச்சு வார்த்தை மூலம்
பூச்சொரிய வேண்டும் வாழ்வில்
போதும் அந்த வேதனைகள்.
அப்பனை மரத்தின் கீழ்தான்
அப்பனை சுட்டுக் கொன்றார்
கொப்பரின் சாவின் பின்னால்
கற்-பனைகள் கலைஞ்சு போச்சு.
செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஷெல்லிலே காயப் பட்டான்.
செல்லாத இடங்கள் இல்லை
சொல்லாத மந்திரம் இல்லை.
கண்ணி வெடிகளினால்
கண்ணீரில் கலந்த வழ்க்கை
இன்னும் மாறவில்லை
இவர்க்கு யாருமில்லை
சாவடிச் சோதனையில்
சாவடித்த வாழ்க்கை இன்னும்
காவடியாய் ஆடுகிறது
நோவு பட்ட மக்கள் மனதில்
ஈழமென்றார் இல்லையென்றார்
யாராரோ சண்டை இட்டார்
ஓலம்தான் மிஞ்சியது
ஒன்றுமறியா மக்களுக்கு
ஆயுதச் சண்டையினால்
ஆயிரம் உயிர்கள் போச்சு
பேயாட்டம் போட்ட அந்த
பிரச்சினை மீண்டும் வேண்டாம்.
பூச்சு வார்த்தை இன்றி
பேச்சு வார்த்தை மூலம்
பூச்சொரிய வேண்டும் வாழ்வில்
போதும் அந்த வேதனைகள்.