போதும் அந்த வேதனை...!

முகம்மட் நிரெளாஸ்-

ப்பனை மரத்தின் கீழ்தான்
அப்பனை சுட்டுக் கொன்றார்
கொப்பரின் சாவின் பின்னால்
கற்-பனைகள் கலைஞ்சு போச்சு.

செல்லமாய் வளர்ந்த பிள்ளை
ஷெல்லிலே காயப் பட்டான்.
செல்லாத இடங்கள் இல்லை
சொல்லாத மந்திரம் இல்லை.

கண்ணி வெடிகளினால்
கண்ணீரில் கலந்த வழ்க்கை
இன்னும் மாறவில்லை
இவர்க்கு யாருமில்லை

சாவடிச் சோதனையில்
சாவடித்த வாழ்க்கை இன்னும்
காவடியாய் ஆடுகிறது
நோவு பட்ட மக்கள் மனதில்

ஈழமென்றார் இல்லையென்றார்
யாராரோ சண்டை இட்டார்
ஓலம்தான் மிஞ்சியது
ஒன்றுமறியா மக்களுக்கு

ஆயுதச் சண்டையினால்
ஆயிரம் உயிர்கள் போச்சு
பேயாட்டம் போட்ட அந்த
பிரச்சினை மீண்டும் வேண்டாம்.

பூச்சு வார்த்தை இன்றி
பேச்சு வார்த்தை மூலம்
பூச்சொரிய வேண்டும் வாழ்வில்
போதும் அந்த வேதனைகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -