வாழைச்சேனை கலைஞர் மீராஷாஹிப் பெளண்டேசனுக்கு சாட்டோ வை.எல்.மன்சூரினால் நிதி கையளிப்பு.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – வாழைசேனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.எல்.எம்.லியாப்தீனின் வேண்டுகோளுக்கு அமைவாக வாழைச்சேனை பிரதேசத்தில் கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறையில் சமூக சேவையாளனாக செயற்பட்ட மர்ஹும் கலைஞர் மீராஷாஹிப்பின் நினைவாக இயங்கி வருகின்ற சமூக சேவைகள் அமைப்பான மீராஷாஹிப் பெளண்டேசனுக்கு சாட்டோ வை.எல்.மன்சூரினால் ஒரு தொகைப்பணம். கடந்த 11.03.2017 சனிக்கிழமை இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த மாதங்களுக்கு முன்னர் பெளண்டேசனினால் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டிக்கான இறுதி போட்டியின் நிகழ்விற்காகவே குறித்த ஒரு தொகைப்பணம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற அதே இடத்தில் குறித்த நிகழ்வில் அமைப்பாளர் லியாப்தீன் மற்றும் அல்-அக்ஸா விளையாட்டு கழகத்தின் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரர் டில்ஷான் காதரும் கலந்து கொண்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -