முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கும் பாதாள உலகக் கோஷ்டியினரால் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற பாதாள உலக கோஷ்டியினரை மீண்டும் தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டுக்குள் வரவழைத்துள்ளதாகவும் அவர்களுடன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
