புனரமைப்பு செய்யப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு



ஹம்ஸா கலீல்-

விளையாட்டுத் துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் இன்று 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இத் திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் கௌரவ இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி நகர சபை செயளாலர் எஸ்.எம்.எம் சபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் இருபது இலட்சம் ருபா நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -