களுத்துறை சம்பவத்தை தொடர்புடைய வேன் கண்டுபிடிப்பு

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஹொரன - மொரகஹஹேன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வௌ்ளை நிற வேனே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த வேன் சந்தேகநபர்கள் பயன்படுத்தியதா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளார். 

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினரான சமயங் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்தனர். 

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதோடு, அவர்கள் வௌ்ளை வேன் ஒன்றிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -