பாறுக் ஷிஹான்-
வடமராட்சி பகுதியில் இருந்து கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் இன்று(24) அதிகாலை பளை போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 22கிலோ கேரள கஞ்சாவினையும் கைபெற்றியுள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எஸ்.டபள்யூ றஞ்ஜன பண்டார தெரிவித்தார்.
அதிகாலை 2:00 மணியளவில் பளை போக்குவரத்து பொலிஸார் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார் ஒன்று சோதனையிடப்பட்டது.
காரில் இருந்த இருவரையும் விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னர் முரணான வகையில் பதில் அளித்துள்ளனர். மேலும் சந்தேகம் அடைந்த பொலிஸார் காரின் பின் கதவினை திறந்து பார்த்த போது, இரண்டு கைபைகளில் கஞ்சா இருந்ததனை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு கைபெற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 36 இலட்சம் என தெரிவித்த பொறுப்பதிகாரி கைதான சந்தேக நபர்கள் உடுப்பிட்டி வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த 37வயதுடைய லேகேஸ்வரன் இந்திரபாஸ்கர், மற்றும் 25வயதுடைய கரவெட்டி நெல்லியடி பகுதியினை சேர்ந்த சிவஞானம் தயாளன் என பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், விசாரணை நிறைவு பெற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
