திருகோணமலை மாவட்டத்தில் 1050 டெங்கு நோயாளர்கள்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இன்று 27 வரை 1050 டெங்கு நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளதாகவும் அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ.கயல்விழி தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 155 டெங்கு நோயாளர்களும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 278 நோயாளர்களும் குறிஞ்சாங்கேணி பிரிவில் 68 நோயாளர்களும் மூதூர் சுகாதார பிரிவில் 318 டெங்கு நோயாளர்களும் மொத்தமாக மாவட்டத்தில் 1050 டெங்கு நோயாளர்கள் இணங்கானப்பட்டுள்ளதுடன் கிண்ணியாவில் மாத்திரம் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிண்ணியா-மூதூர்-திருகோணமலை போன்ற வைத்தியசாலைகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் வைத்தியசாலைகளுக்கு அதிகளவான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பீ.கயல்விழி மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -