முச்சக்கர வண்டி சாரதிகளின் குறை தீர்த்து தீர்வு அளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்

முச்சக்கர வண்டி தரிப்பிடமொன்று இன்றி நீண்ட நாட்களாக அல்லலுற்று வந்த வாகரை பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது ஜீவனோபாயத்தை முன்னெடுத்து வந்தனர், இந்நிலையில் அண்மையில் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் முச்சக்கர வண்டி சாரதிகள் மகஜரொன்றை கையளித்து தமது துயரங்களை எடுத்து கூறியிருந்தனர்.

இதனை செவிமடுத்த முதலமைச்சர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இடத்திற்கு சென்று அவர்களுக்கான முச்சக்கரவண்டி தரிப்பிடமொன்றை வழங்கியதுடன் அவர்களின் தொழில்களை கௌரவிக்கும் விதமாக அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்தார்.

இந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மத்தியில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இரு சாராரும் தொழில்புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -