எஸ்.அஷ்ரப்கான் -
மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வினை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளின்போது கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 15 வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்கும் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழக 15 வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணிக்குமிடையே நடைபெற்ற போட்டியில் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழக 15 வயதுப் பிரிவு அணி 1 ; 0 எள்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மருதமுனை கிறீன் மெக்ஸ் விளையாட்டுக் கழக கனிஸ்ட அணிக்கும் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமிடையே நடைபெற்ற போட்டியில் கல்முனை பஹ்றியன்ஸ் விளையாட்டுக் கழகம் 2 ; 0 எள்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.