அடுத்த ஒரு இரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள புனித ரமழான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, சவுதி அரேபியா அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 தொன் எடையுள்ள பேரீச்சம் பழங்களை வழங்கும் நிகழ்வு 16.02.2026 அன்று கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் மஹ்மூத் அல் கஹ்தானி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) வழங்கிய பேரீச்சம் பழ நன்கொடையை, மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு விவகாரப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, சவுதி நிவாரண மையத்தின் பிரதிநிதி, முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பல மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 comments :
Post a Comment