எம்.வை.அமீர்,யு.கே.காலிதின்-
சாய்ந்தமருது கமு / றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் 2017.01.19 ஆம் திகதி பேண்தகு பாடசாலை அபிவிருத்தி (sustainable school Development Programme -2017) நிகழ்ச்சி திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி காரியாலயத்தின் அனுசரணையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
”பேண்தகு யுகத்தின் மூன்றாம் ஆண்டு உதயம் ”நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். I.L.M றகுமான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் உணவுப்போசனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜனாப். J. M. நிஜாமுதீன் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
பெருமளவான பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இறுதியில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.