அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும் -சுபையிர்

எம்.ஜே.எம்.சஜீத்-

மிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாகவும், பரஸ்பர நட்புறவுடனும் வாழும் எல்லைக் கிராமங்களுக்குச் சென்று முஸ்லிம் மக்களை அச்சுறுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய அநாகரிகமான செயற்பாட்டினை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் தாமரைக்கேணி அல் அக்ஸா எல்லைக் கிராமத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தற்காலிகமாக தொழுகைக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டில், மற்றும் அங்குள்ள முஸ்லிம்களது காணிகளின் வேலிகள் என்பன சேதப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகளுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் நான் கொழும்பில் இருக்கின்ற போது ஏறாவூரிலிருந்து தாமரைக்கேணி கிராம மக்களும், சமூகநலன் விரும்பிகளும் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தாமரைக்கேணி அல் அக்ஸா எல்லைக் கிராமத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவம் பற்றி விளக்கினர்.

யுத்தம் இடம்பெற்ற போது உயிரச்சுறுத்தலில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது பூர்வீக வாழ்விடங்களுக்குக் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கின்றது.

உண்மையில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள் இருக்குமாயின் பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொறிமுறையைக் கையான்டிருக்க வேண்டும். அதனைக் கையாள்வதற்கு பல நடைமுறைகள் இருக்கின்றன. குறிப்பாக சிவில் நிருவாகம், பிரதேச செயலகம், பொலிஸ், நீதிமன்றம் என பல்வேறு வழிகலுள்ளது அதனை விட்டு விட்டு அடாவடித் தனத்தில் இறங்கி இனவாதம் பேசி மக்களைத் தூண்டும் விதமாக நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயலாகும்.

தாமரைக்கேணி அல் அக்ஸா எல்லைக் கிராமம் ஆங்கிலேயர் காலத்திருந்தே முஸ்லிம்களுக்கு உரித்தான பூர்வீக இடமாக இருந்து வந்துள்ளது. எனினும், யுத்தத்தின் காரணமாக முஸ்லிம்கள் 30 வருடங்களாக தமது வாழ்விடங்களை விட்டு ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்பொழுது அந்தப் பகுதியில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் வாழ்வதற்கு மனமுவந்து தமிழ் மக்களுக்கும் இடமளித்திருக்கின்றார்கள்.

.குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் தாங்கள் பூர்வீகமாக குடியிருந்த சொந்தக்காணிகளுக்கு செல்கின்ற போது எந்தவொரு தமிழ் சகோதரரும் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லை இது இவ்வாறிருக்க சொந்தக் காணிகளில் குடியேறிவரும் முஸ்லிம்கள் அரச காணிகளிலும் மீள் குடியேறிவிடுவார்கள் என்ற அச்சத்தினாலே திட்டமிட்ட அடிப்படையில் சில நடவக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், உண்மைகள் எதையுமே அறிந்திராத பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிழையான தகவல்களைக் கேட்டுக்கொண்டு தனது அடியாட்களுடன் அந்தக் கிராமத்திற்குச் சென்று முஸ்லிம் மக்களின் காணிகளிலுள்ள வேலிகளைப் பிடுங்கி எறிந்து சேதப்படுத்தி, அங்கு தற்காலிகமாக தொழுகைக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தை எரித்துள்ளார். இனங்களுக்கிடையியே முறுகலை ஏற்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலை வன்மையாகக் கன்டிக்கின்றேன்.

இன நல்லுறவுக்காக அனைவரும் பாடுபட்டுக் கொண்டு வரும் இக்காலகட்டத்தில் இனங்களுக்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர். இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த முனைவது ஒரு அச்சுறுத்தல் என்றே கருத வேண்டியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எல்லைக் கிராமங்களுக்குச் சென்று தமிழ், முஸ்லிம் உறவைச் சீர்குலைக்கும் விதமாக தொடர்ச்சியாக ஈடுபட்டு, இனவாத கருத்துக்களையும் பேசுவது ஆரோக்கியமானதல்ல.

இத்தகைய அச்சுறுத்தல் எதிர்காலத்திலும் இடம்பெறுமாக இருந்தால் மக்களைக் குழப்பும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அடாவடித் தனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் ஒருபோதும் பின் நிற்க மாட்டார்கள் என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

1990ஆம் ஆண்டு ஏறாவூர் நகரத்திற்குரிய காணி நிருவாகம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டும், இன்று வரைக்கும் ஒரு துண்டுக் காணி கூட ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படவில்லை.

இதனால் இன்று ஏறாவூர் குறுகியதொரு நிலப்பரப்புக்குள் உள்ளடக்கப்பட்டு சுமார் 10500 குடும்பங்கள் நெரிசலுக்கு மத்தியில் வாழுகின்ற துர்ப்பாக்கிய நிலமை உருவாகியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இப்பிரதேச அரச காணிகள் மிகத்திட்டமிடப்பட்டு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்களது சொந்தக் காணிகளில் மக்கள் குடியேறுகின்ற போது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நீதமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -