பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் எம். ஜி ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜி. ஆரின் 100 வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று(17) செவ்வாய்க்கி ழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜி. ஆர் சிலையருகே நடைபெற்றது.
ஈழத்து எம். ஜி. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,சிறப்புவிருந்தினராக இந்திய துணைத்தூரதக ஆலோசகர் ஆர் செல்வம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என். சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்
எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 100 பேருக்கு உடுபுடவைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.