மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம் தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நேற்று இடம்பெற்றது
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இராணுவத்தினர் பொலிஸார் உட்பட அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முழுமையான முயற்சியில் இடம்பெறவுள்ள போதைப்பொருளுக்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க பாதுகாப்புத் தரப்பினர் இதன் போது உறுதியளித்துள்ளனர்.