மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்ல் ஓட்டமாவடி காகித நகர் மஸ்ஜிதுல் பிலால் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் நேற்று (20.12) கையளிக்கப்பட்டது. ஐம்பது குடும்பங்களை கொண்டுள்ள சூடுபத்தினசேனை காகித நகர் கிராமத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாயலுக்கு இதுவரை ஒலிபெருக்கி சாதனம் இல்லாத குறை நிவர்த்திக்கப்பட்டது.
இந் நிகழ்வின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்; பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இக்கிராமத்தின் அபிவிருத்தியை பொறுப்புனர்வோடு செய்து தருவதாக உறுதியளித்தார்.




