இலங்கை அரசு கொண்டுவர உள்ள புதிய சட்டத்தை தடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவை தமிழகம் என்றும் மறக்காது. தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அவர் வகுத்த பாதையில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செல்ல வேண்டும். மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் சித்ரவதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அரசு அடுத்த மாதம் புதிதாக ஒரு சட்டத்தை கொண்டுவர உள்ளது.

தவறுதலாக எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதற்காகவும், அவர்களுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.7 கோடி வரை அபராதம் விதிப்பதற்காகவும் அந்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள். அந்த சட்டத்தால் தமிழக மீனவர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, அந்த சட்டத்தை கொண்டு வரவிடாமல் தடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி, வருகிற 16-ந்தேதி ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன். தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறினார்.(மாம)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -