றியாத் ஏ. மஜீத்-
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டும்.ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் இன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் வலிமொழிகின்றேன் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (31) அட்டாளைச்சேனை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் பிரதி அமைச்சர் தெரிவிக்கையில்,
கடந்த பொதுத்தேர்தலின் போது கட்சியினால் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல்பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. அந்தவாக்குறுதியினை கட்சி தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிறைவேற்றுவதற்கான தருணத்தில்அவ்வாக்குறுதியினை அவர் நிறைவேற்றுவார். ஏனெனில் கட்சிக்கான இரண்டு தேசியப்பட்டியல்பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை திருகோணமலை மாவட்டத்திற்கும் மற்றையதைஅட்டாளைச்சேனைக்கும் வழங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கின்றேன். அந்தமக்களுக்கு கட்சியினால் வழங்கப்பட்ட வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்பட வேண்டும்.இவ்விடயத்தில் மாற்றுக்கருதிற்கு இடமில்லை.
அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கவேண்டும் என வலியுறுத்தி அட்டாளைச்சேனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் இன்று தீர்மானமொன்றைநிறைவேற்றியுள்ளது. இத்தீர்மானமானது அட்டாளைச்சேனை மக்களின் ஒட்டு மொத்த தீர்மானமாகும்.இதனை நான் வலிமொழிகின்றேன்.
கடந்த பொதுத்தேர்தலில் அட்டாளைச்சேனை மக்களின் ஆணையைப் பெற்றவன் என்ற அடிப்படையில்அம்மக்களின் எதிர்பார்ப்புக்களையும், உணர்வுகளையும் நான் நன்கறிவேன். இதனைக் கருதிற்கொண்டுகட்சித் தலைமை செயற்படும் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
