மங்களராம விகாராதிபதி பிணையில் விடுதலை.!

ட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி சங்கநாயக்கருமான அம்பிட்டியே சுமணரத்ன தேரரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேரரை 50 ஆயிரம் ரூபா இரு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் மீண்டும் ஜனாவி 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொது பல சேனவின் வருகை தொடர்பாக மட்டக்களப்பு நகரில் கடந்த 3 ஆம் திகதி பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. பொது பல சேனவின் வருகை தடுக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட தடை உத்தரவை மீறி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண ரத்ன தேரரால் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேரரின் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்றுதிரட்டி சமாதானத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

தேரார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -