உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் வரலாற்று நூல் வெளியீட்டு விழா..!

ய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ’உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹகீம் கலந்துகொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் ஈ.பி.ரி.கே. ஏக்கநாயக்க பங்கேற்கவுள்ளார். 

ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரையான ஒரு வரலாற்று தொகுப்பாக எழுதப்பட்டுள்ள இந்நூலுக்கான ஆய்வுரையை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.
நுஸ்கி முக்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -