75 வைத்தியர்களில் 3 பேர் மாத்திரமே எமது மாகாணத்தில் கடமை செய்ய விண்ணப்பம் - சுகாதார அமைச்சர்

பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்-
டந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு சென்ற 75 வைத்தியர்களில் 3 வைத்தியர்கள் மாத்திரமே எமது மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு கடமை செய்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். எஞ்சிய 72 வைத்தியர்களும் கொழும்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமை செய்வதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறையின் 2016/ 2017 ஆம் ஆண்டு நிதி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நேற்று மாலை (03) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

எமது மாகாணத்துக்கு 110 வைத்தியர்கள் தேவைப்பாடாக இருக்கின்ற இந்நிலைமையில் எமது மாகாணத்திலுள்ள வைத்தியர்களே எமது மாகாணத்தில் கடமை செய்ய விருப்பமில்லாதபோது வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியர்கள் எவ்வாறு எமது மாகாணத்தில் கடமை செய்ய விரும்புவார்கள். என்ற கேள்வியை எழுப்பினார். 

எமது மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுச் செல்லும் வைத்தியர்கள் எமது மாகாணத்தில் கடமை செய்யும் மனநிலைமைக்கு முதலில் வரவேண்டும். இவ்வாறு அவர்களின் மனநிலைமை மாறாத வரை எமது மாகாணத்தின் வைத்திய சேவையில் வளர்ச்சியை ஒருபோதும் முன்னடைவைக் காண முடியாது என்றார். 

இந்த மீளாய்வுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச பணிப்பாளர்கள், பிராந்திய பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -