கிழக்கு முதலமைச்சரின் வாகனம் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் மயிலகுடாவ பகுதியில் வீதியின் குறுக்கே நின்ற யானையுடன் மோதியதில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் சென்ற கெப் வாகனம் இன்று (21) விபத்துக்குள்ளானதில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கயான் பிரியதர்ஷன (44வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இரு பக்கங்களும் திருப்ப முடியாத நிலைக்கு சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -