இந்த முயற்சியின் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பின் செயல் திட்டங்களைச் செயல்படுத்தவும், பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா தெரிவித்துள்ளார். சமூக, கலாச்சார மற்றும் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் தொடக்கம் முதல் நடைபெற்று வரும் இந்த நியமன செயல்முறையின் கீழ், இதுவரை அநுராதபுரம், கண்டி, நுவரேலியா, கம்பஹா மற்றும் ஹட்டன் மாவட்டங்களுக்கு இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்த வாய்ப்பு திறந்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைய ஆர்வமுள்ள பெண்கள், மேலதிக தகவல்களைப் பெறவும், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு மகளிர் அணி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த முயற்சி, பெண்களின் சமூக பங்களிப்பை மேம்படுத்துவதோடு, அவர்களின் தலைமைத்துவ திறன்களை வெளிக்கொணரும் ஒரு முக்கிய வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

0 comments :
Post a Comment