திருகோணமலை மடப்பள்ளி தீக்கிரை..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- வெறுகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லடி மலை நிதியம்மன் இந்து ஆலயத்தின் மடப்பள்ளி இன்று (26) காலை இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்து ஆலயத்தின் பூசைப்பொருற்களை பாதுகாத்து வைக்கும் மடப்பள்ளி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் கல்லடி றஜமஹா விகாரையில் சுத்திகரிப்பு உதவியாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது விகாரையின் குப்பைகளை தீ வைத்த வேளை தீ பரவியமையினால் மடப்பள்ளி தீப்பற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

தீப்பற்றியமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -