உயர்கல்வி பெருந்தெருக்கள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமாகிய கெளரவ அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு இன்று நேரடி விஜயம்.
உயர்கல்வி பெருந்தெருக்கள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமாகிய கெளரவ அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல புனானையில் அமைக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை(21) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
மீள்குடியேற்ற புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவருமாகிய கெளரவ இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் எம்.ஏ, எம்.பி அவர்களின் விஷேட அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பல்கலைக்கழகத்தின் பணிகள் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பாக கலந்தாலோசித்த கெளரவ அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறான பாரிய முதலீடு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதை வெகுவாக பாராட்டியதோடு தனது அமைச்சு இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டார்.