திருகோணமலை பரீட்சை நிலையங்களில் பணியாற்றுபவா்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க வேண்டும்..!

கிண்ணியன்-
ற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கல்விப் பொதுத் தராதர உயா் தரப் பரீட்சைக்காக திருகோணமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் அலுவலா்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவா்களுக்கு பரீட்சை ஆணையாளா் நாயகம் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் என பரீட்சை நிலையங்களில் மேற்பார்வையாளா்களாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இது தொடா்பாக இவா்கள் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டிருப்பதாவது,

கல்விப் பொதுத் தராதர உயா் தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைக் கடமைகளுக்காக மேற்பார்வையாளா், உதவி மேற்பார்யைாளா்களாக நியமிக்கப்பட்டு, அதற்கான நியமனங் கடிதங்களும் எங்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்டம்டிருந்தன. இந்த கடிதத்தின் பிரகாரம் அவரவா் சொந்த ஊரிலே உள்ள பரீட்சை நிலையங்களில் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்தனா்.

இந்த நிலையில், பரீட்சை நிர்வாக அலுவா்களுக்கான கூட்டம் திருமோணமலை உவா்மலை விவேகாநந்தா கல்லூரியில் 2016.07.25 ஆம் திகதி நடைபெற்றது. இந்தக்கூட்டத்தின் இறுதியிலே எங்களுக்கான கடமை நிலையங்கள் சொந்த பிரதேசங்களை விட்டு வேறு பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்படடிருப்பதாக உதவிப் பரீட்சை ஆணையாளரால் அறிவிக்கப்பட்டது.

இதற்கிணங்க, திருகோணமலை கல்வி வலயத்தில் உள்ளவா்கள் கிண்ணியா வல்வி வலயத்துக்கும் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ளவா்கள் திருகோணமலை, மற்றும் மூதூா் கல்வி வலயங்களுக்கும் மூதூா் கல்வி வலயத்தில் உள்ளவா்கள் கிண்ணியா கல்வி வலயத்துக்கும் இடமாற்றப்பட்டார்கள்.

இதன் மூலம் கடமையாற்ற வேண்டிய பரீட்சை நிலையம் வெகு தூரமாக்கப்பட்டது. ஒருவா் நாளொன்றுக்கு செல்வதற்கும் வருவதற்குமாக ஆகக் குறைந்தது ஐம்பது கிலோமீற்றா் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. பரீட்சை என்பதால் நேரத்துக்கு முன் கூட்டியே செல்ல வேண்டும். பொது பயணிகள் போக்குவரத்துச் சேவையை நம்பி போக முடியாது. இதனால் சொந்தமாக வாகனம் இல்லாதவா்கள் மூன்று போ் சோ்ந்து முச்சக்சர வண்டி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 1500 ரூபா கொடுத்து கடமைக்குச் செல்கிறரா்கள்.

எனவே போக்குவரத்துச் செலவுக்காக மட்டும் நாளாந்தம் 500 ரூபாவை ஒரு ஊழியா் செலவு செய்து வருகிறார்கள். அத்தோடு சாதாரண நோக்குநா்களையும் மேற்பார்வையாளா்களான நாங்களே எங்களுடைய பிரதேசங்களில் இருந்து அழைத்துச் செல்கிறோம். அவா்களுக்கு பரீட்சை திணைக்களம் வழங்கும் ஒரு நாளைக்கான கொடுப்பனவு 950 ரூபாவாகும். இதில் அவா் ஒரு நாளைக்கு 500 ரூபாவை போக்குவரத்துக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில் பல்வேறு உடல், நேரம் மற்றும் பொருளாதார ரீதியான தியாகங்களுக்கு மத்தியில், அரசாங்க ஊழியா்கள் என்ற வகையில் பரீட்சைக் கடமைகளை திருப்தியாக செய்து முடிக்க வேண்டும் என்ற மேலான நோக்கோடு செய்து கொண்டிருக்கின்ற எங்களுக்கு போக்குவரத்துச் செலவையாவது ஈடு செய்யக்கூடிய வகையில் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் என பரீட்சை ஆணையாளா் நாயகத்தை கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -