பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவதி இராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-
ண்டாரவளை இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பிரயாணி ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் அபாயகரமான மலைப்பகுதியை நோக்கி ஏறும் சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தனது காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 19 வயதுடைய ‘மரீனா க்ரூஸ்’ எனும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ் சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -