பிணைக்கு கையொப்பம் இட்டவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் சதுரப்பிணை..!

எப்.முபாரக்-
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிணைக்கு கையொப்பாம் இட்ட நபர் ஒருவரை ஐம்பதாயிரம் ரூபாய் சதுரப்பிணையில் செல்லுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா நேற்று செவ்வாய்கிழமை (23) உத்தரவிட்டார். நாச்சிக்குடா, சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் முதலை வகையினைச் சேர்ந்த பள்ளிகள் பதினெட்டினை முச்சக்கர வண்டியில் சீனக்குடாவிலிருந்து கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற நபரை பொலிஸாரால் கைது செய்த போது பிணையாளராக கையொப்பம் இட்டிருந்தார் என தெரியவருகின்றது.

பிரதான சந்தேகநபர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதால் அந்நபருக்கு பிணையாளராக கையொப்பம் இட்ட நபரை திங்கட்கிழமை (22)கைது செய்ததாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிணையாளரான சந்தேகநபரை பொலிஸார் செவ்வாய்கிழமை (23) திருகோணமலை நீதிமன்ற நீதிவான்முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே ஐம்பதாயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -