திருட்டு அலைபேசியை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்..!

எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பகுதியில் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான திருட்டு அலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று செவ்வாய்கிழமை(23) உத்தரவிட்டார். மூதூர், தக்வாநகர் பகுதியைச் சேர்ந்த 31வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான திருட்டு அலைபேசியொன்றினை தம் வசம் வைத்திருந்த நிலையிலேயே அலைபேசி உரிமையாளர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக அலைபேசியின் நபரை இரகசிய இலக்கங்களை வைத்து திங்காட்கிழமை(22) கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -