திருகோணமலை கடற்கரையில் பெண் ஒருவரை கையில் தடவிய நபர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு பாலியல் ரீதியில் கையில் தடவிய நபர் ஒருவரை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று செவ்வாய்கிழமை (30) உத்தரவிட்டார். ஜாயா நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் குச்சவெளி கடற்கரைப் பகுதியில் குளிப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணை அருகில் சென்று பாலியல் ரீதியில் கையினால் தடவியதாக குறித்த பெண்ணிணால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய திங்கட்கிழமை(29)பகல் கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று செவ்வாய்கிழமை(30) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -