திருகோணமலை- மூதூர் பிரதேசத்திற்கான ஒருங்கினைப்புக்குழு கூட்டம்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மூதூர் பிரதேசத்திற்கான ஒருங்கினைப்புக்குழு கூட்டம் நேற்று (30) காலை 9.30 மணியக்கு மாவட்ட இணைக்குழுத்தலைவர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் பிரதேச செயலாளர் வீ.யூசுப் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.அதில்

01- இறால் குழி முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம்.

02-சுனாமியால் பாதிக்கப்பட்ட தக்வா நகர் வட்டம் போன்ற மக்களின் குடியேற்றம்.

03-தோப்பூர்- கள்ளம்பத்தை 10 வீட்டுத்திட்டம் பொது மக்களிடம் கையளித்தல்.

04-தோப்பூர்- இக்பால்நகர் உள்ளைக்குளம் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் போன்ற நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கைகளுக்கு கூட்டத்தின் போது உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.கூடிய விரைவில் தீர்வினை வழங்குவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்தார். இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்ரூப்- கே.துரைரெட்ணசிங்கம்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர்- கே.நாகேஸ்வரன் மற்றும் பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -