அஹமட் இர்ஷாட்-
ஓர் தகப்பனோ அல்லது தாயோ எப்பொழுது தனது பிள்ளையை நினைத்து பெருமைபட்டு கொள்வார்களோ அதையும் தாண்டி ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது பிரதி அமைச்சர் அமீர் அலி, தனது பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவன் என்பதனை நினைத்து பெருமைபட்டு கொள்கின்றது என்பதானது பிரதேசத்தில் இருக்கின்ற ஒவ்வருவருடைய வார்த்தைகளால் உறுத்திபடுத்தும் விடயமாக காணப்படுகின்றது.
1917ம் ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது தனது நூற்றாண்டு விழாவினை வருகின்ற 2017ம் ஆண்டு கொண்டாட இருக்கின்ற இந்த நேரத்தில பல அரசியல் காய் நகர்த்தல்கள், தனிப்பட்ட செல்வாக்குகள், பிரதேசவாதத்தின் உச்ச கட்ட அத்துமீறல்கள், தனி நபர்களின் ஆளுமைகள், அரசியல் பழிவாங்கல்கள், இவைகளுக்கு மத்தியில் எதிர்கொள்ளப்போகும் மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களின் முன்னெடுப்பு சார்ந்த அரசியல் குரோத போட்டி பொறாமைகள் என பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிறுத்திய பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
அது மட்டுமல்லாமல் நூற்றாண்டு விழாவினை எதிர் நோக்கியுள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு இதுவரை காலமும் நிலையான பழைய மாணவர் சங்கம் ஒன்று இல்லாமையானது பாடசாலையின் அணைத்து வகையான அபிவிருத்திகளிலும் தாக்கத்தினை செலுத்தி வந்த நிலையிலே நூற்றாண்டு விழா எனும் கதைகள் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து எண்னில் அடங்காத பாடசாலையின் பழைய மாணவர் சங்கங்களும், கல்வி கற்ற ஆண்டுகளை முன்னிலைப்படுத்தி நண்பர்கள் வட்டங்களும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இயங்க தொடங்கி இருகின்றமையானது பாடசலை விடயத்தில் மகிழ்ச்சி தரும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
எது எவ்வாறாக இருந்தாலும் கிழக்கு மாகாணத்திலே 1950ம் ஆண்டுகளுக்கு பிற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அணைத்தும் பல வழிகளிலும் முன்னிலை பெற்று பல துறைகளிலும் சாதனை படைத்து வருக்கின்ற நிலையிலே நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கின்ற ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் அளவிற்கு கல்வி, மற்றும் ஏனைய துறைகளில் சாதனை படைத்துள்ளதா என்பதும் மக்கள் மத்தியில் இருக்கின்ற கேள்வியாகவே இருக்கின்றது. இதற்கு முக்கிய உதாரணமாக கல்முனையில் இருகின்ற சாகிறா தேசிய பாடசாலைக்கும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருக்கின்ற பாடசாலைகளுக்கும் ஓட்டமாவடி மற்றும் கல்குடா பிரதேசத்தில் இருந்து அதிகளவான மாணவர்கள் தங்களது பாடசாலை கல்வியினை முன்னெடுக்கின்றனர் என்பது முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. . இத்தனைக்கும் கல்முனை சாகிறா தேசிய பாடசாலையானது ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு நாற்பது வருடங்களுக்கு பிற்பாடே ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும்
இவற்றுக்கெல்லாம் எவைகள் அடிப்படை காரணங்களாக இருக்கின்றது என்பது ஒரு புறமிருக்க, பாடசாலைக்கு தேவையான அணைத்து வசதிகளும் இருக்கின்றதா என்பதே முக்கிய கேள்வியாகவும் நிறைவாற்றி கொடுக்கப்பட வேண்டிய விடயமாகவும் இருக்கின்றது. இருந்தும் கடந்த பத்து வருடங்களாக விஞ்ஞான கணித துறைகளில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது குறிப்பிட்ட அடைவுகளை எட்டிப்பிடித்துள்ளது என்பது நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கின்ற பாடசாலைக்கு ஒரு மகிழ்ச்சி தரும் விடயமாகவும் அதன் கல்வி சார் வளர்சியினை எடுத்துக்காட்டும் விடயமாகவும் பார்க்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாமல் நூற்றாண்டு விழவினை கொண்டாட இருக்கின்ற பாடசாலைக்கு முக்கியமான தேவைபாடு என்ன? என்பதனை தனது ஆழ்ந்த சிந்தனையுடனும் பலரது ஆலோசனைகளின் அடிப்படையிலும் சிந்திக்க தொடங்கிய பிரதி அமைச்சர் அமீர் அலி, நாட்டிலே ஒரு தேசிய பாடசாலையானது தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாட இருக்கின்ற நிலையில் அந்த பாடசாலைக்கு முக்கியமான தேவைப்பாடாக இருக்கின்ற நவீன வசதிகளுடனான உள்ளக அரங்கினை கொண்டுவருவதோடு பாடசாலையானது கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டு துறையிலும் தனது சாதனையினை பறைசாற்ற வேண்டும் என்பதற்காக பாடசாலையின் விளையாட்டு மைதானமானது நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படுவதோடு அதற்கான புதிய விளையாட்டு அரங்கினையும் எட்டரை கோடி ரூபா (80.5மில்லியன்) நிதியில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் முடிவுகளுக்கு அமைய தனது அரசியல் சானக்கியத்தினால் கொண்டு வந்துள்ளார்.
இவ்விடயமானது பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் வாழ்க்கையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் பிறந்தவர் என்ற வகையிலும் பாடாசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியிலும் வரலாற்றியல் அழிக்க முடியாத விடயமாக பதியப்பட்டுள்ளது என்பதனை எந்தவொரு கல்குடா மகனும் அரசியல் காற்புணர்சியினை நிலைநிறுத்தி மறுதளிக்க முடியாத விடயமாகும்.
பிரதேசத்திலே பத்து இலட்ச்சம் பதினைந்து இலட்ச்சம் அபிவிருத்தி பணிகளுக்கெல்லாம் விழாக்களும் மாலைகளுமாக திரையிட்டுக்காட்டும் உள்ளூர் வெளியூர் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் என்னூற்றி ஐம்பது இலட்ச்சம் (80.5 மில்லியன்) ரூப்பாய்களை தான் கல்வி கற்ற பாடசாலை என்பதற்காகவும் தனக்கு வாக்களித்து பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்த மக்களின் எதிர்கால தலைவர்கள் கல்வி கற்கின்ற பாடாசலை என்பதற்காகவுமே மிகவும் அமைதியான முறையில் அலட்டிக்கொள்ளாமல் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியினால் இத்திட்டம் கொண்டு வரப்பட்டமையானதை நினைத்து ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது பெருமூச்சு விட்டுக்கொண்டிடுக்கும் என்பதில் எவரிடமும் மாற்றுக்கருத்திருக்காது என்பதே என்னுடைய கருத்தாகும்