சவுதி அரேபியாவின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த இலங்கையர்களுக்காக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஒரு நாளைக்கு 5600 டொலர்களை செலவுக்காக ஒதுக்கிவருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள தூதரகம் மூலம் இந்த நிதி ஒதுக்கப்படுவதாக பணியகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சவுதியிலுள்ள 112 பேர் தொழில்களை இழந்துள்ளனர். இவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகளை வழங்குவது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொறுப்பாகும். இவர்களில் பலருக்கு மீண்டும் தொழில்வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் பணியாற்றிய நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர முடியாத நிலை காணப்படுவதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.