எட்டுப்பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொத்துவில் தவிசாளர்

ன்று மாலை முர்சானா சந்தி மீரா பள்ளிவாயலில் இருந்து வீடு செல்லும் போது 8 பேர் கொண்ட குழுவினரால் தாக்கப்பட்டு பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாஷீத்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் இம்போமிரர் ஊடக வலையமைப்பின் செய்திப்பிரிவு தவிசாளர் வாசிதைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:

இன்று மாலை 4.40 மணியளவில் பள்ளியில் தொழுது விட்டு வீடு செல்லும்போது அங்கு குடிவெறியுடன் வந்த 8பேர் கொண்ட குழுவினர் தனக்கு தாறுமாறாக ஏசியும் முகத்தில் பாய்ந்து இடித்துத் தாக்கியதில் தான் செய்வதறியாது திகைத்து நின்றதாகவும் பின்னர் அங்கு கூடியவர்களால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாக்கிய குழுவினரை மக்கள் தடுக்க வில்லையா..? என்று கேட்டமைக்கு அவர்கள் புச்சர்கள் மோசமான வெறியுடன் நின்றார்கள் பல இடங்களில் சண்டை பிடித்துக்கொண்டு வந்தவர்கள்தான் தன்னையும் தாக்கினார்கள் மக்கள் அருகில் வருவதற்கு அச்சப்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.

இதுசம்மந்தமாக பொத்துவில் பொலிசாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துப் பலனளிக்க வில்லை.
ஆனால் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார் மீதமுள்ளவர்களையும் கைது செய்யவேண்டும் இல்லையேல் போராட்டம் செய்வோம் என்று வைத்தியசாலைக்கு முன்னாள் கூடிநின்றவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டன.

மேலதிகத் தகவல்கள் சற்று நேரத்தில்...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -