ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தில் குழப்பமா.. - அங்கு நடந்தது என்ன

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் இன்று மாலை ஏழு மணிக்கு தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அதன் தலைமையகமான தாருல்சலாமில் கூடியது.

கடந்த மாதமாக ஊடகங்கள் மூலம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தலைவரால் பதில் வழங்கப்பட்ட பின்னர் கட்சியின் தவிசாளார் கருத்துக் கூற முற்பட்ட வேளையில் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தவிசாளரைப் பேசவிடாது கட்சிக் கோட்பாட்டை மீறி ஊடகங்களுக்கு அறிக்கை விட்டதனைக் கண்டித்து பேசவிடாமல் குறுக்கீடு செய்து கொண்டிருந்தமையால் உயர்பீடம் தலைவரால் கலைக்கப்பட்டு அனைவரும் வெளியேறிச்சென்றனர்.

அங்கு நடந்த பிரச்சனை சம்மந்தமாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:


உயர்பீடக் கூட்டம் வழமைபோன்றே நடந்தது. ஆனால் தலைவரினால் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் தீர்வு கூறப்பட்டு உயர்பீட உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சிலர் குழப்ப நினைத்து உள்ளே வந்து மூக்குடைந்து வெளியே சென்றனர் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -