கடந்த மாதமாக ஊடகங்கள் மூலம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தலைவரால் பதில் வழங்கப்பட்ட பின்னர் கட்சியின் தவிசாளார் கருத்துக் கூற முற்பட்ட வேளையில் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் தவிசாளரைப் பேசவிடாது கட்சிக் கோட்பாட்டை மீறி ஊடகங்களுக்கு அறிக்கை விட்டதனைக் கண்டித்து பேசவிடாமல் குறுக்கீடு செய்து கொண்டிருந்தமையால் உயர்பீடம் தலைவரால் கலைக்கப்பட்டு அனைவரும் வெளியேறிச்சென்றனர்.
அங்கு நடந்த பிரச்சனை சம்மந்தமாக உயர்பீட உறுப்பினர் ஒருவர் இம்போட்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:
உயர்பீடக் கூட்டம் வழமைபோன்றே நடந்தது. ஆனால் தலைவரினால் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் தீர்வு கூறப்பட்டு உயர்பீட உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சிலர் குழப்ப நினைத்து உள்ளே வந்து மூக்குடைந்து வெளியே சென்றனர் என்று தெரிவித்தார்.