கொழும்பு பம்பலப்பிட்டியில் வசித்த பிரபல வர்த்தகர் சகீப் சுலைமான் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு வர்த்தகர்களுடைய வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த இரு வர்த்தகர்களிடம் சுமார் ஆறரை மணி நேரம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சகீபுடன் மிகவும் நெருங்கிய முறையில் பல கோடி ரூபா கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது வெளிநாட்டு பயணங்களைத் தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கவுள்ளனர். இதேவேளை, சகீப் சுலைமான் கொலை சம்பவத்தில் முன்னதாக ஐந்து வர்த்தகர்களின் வெளிநாட்டு பயணங்களை நீதிமன்றம் தடை செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.