க.கிஷாந்தன்-
ஊவா பரணகமை பிளேலெமன்ட் தோட்ட மக்கள் ரத்னோதாகம முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளதோடு பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஊவா பரணகமை ரத்னோதாகம முருகன் ஆலயத்தின் அரண் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது பெரும்பாண்மையின பிரதேசவாசிகளுக்கும் கோயில் நிருவாகத்தினருக்குமிடையே அமைதியின்மை ஏற்பட்டது.
அவ் அரண் அமைக்கப்படுவதால் பிரதேசவாசிகளின் வீதியொன்றுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்த போதும், கோயில் நிருவாகத்தினர் இதனை மறுக்கவே இவ் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் பொலிஸார் இனைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமது வேண்டுகோளுக்கு அதிகாரிகள் செவி சாய்த்து தமக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தரும் வரை தாம் இவ் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என பிளேலெமன்ட் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.