முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டம்..!

க.கிஷாந்தன்-
வா பரணகமை பிளேலெமன்ட் தோட்ட மக்கள் ரத்னோதாகம முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளதோடு பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஊவா பரணகமை ரத்னோதாகம முருகன் ஆலயத்தின் அரண் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது பெரும்பாண்மையின பிரதேசவாசிகளுக்கும் கோயில் நிருவாகத்தினருக்குமிடையே அமைதியின்மை ஏற்பட்டது.

அவ் அரண் அமைக்கப்படுவதால் பிரதேசவாசிகளின் வீதியொன்றுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்த போதும், கோயில் நிருவாகத்தினர் இதனை மறுக்கவே இவ் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் பொலிஸார் இனைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமது வேண்டுகோளுக்கு அதிகாரிகள் செவி சாய்த்து தமக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தரும் வரை தாம் இவ் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என பிளேலெமன்ட் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -