மிருகங்களில் ஒட்டியுள்ள உண்ணிகள் போன்று இவர்கள் : விமல்,கம்மம்பிலவுக்கு மஹிந்த சவால்

தய கம்மம்பிலவும் விமல் வீரவங்சவும் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு முடியுமானால், ஒரு தொகுதியையேனும் வென்று காட்டட்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

எந்தவிதமான தனிப்பட்ட நிரந்தர வாக்கு வங்கியும் இன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கினால் குளிர்காய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மிருகங்களின் உடலில் ஒட்டியுள்ள உண்ணிகள் போன்று இவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளுக்காக ஒட்டிக் கொண்டு கட்சியின் இரத்தம் குடிப்பதாகவும் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்ற இவர்கள், அக்கட்சிக்காக எதனையாவது செய்திருக்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்று அக்கட்சியை விமர்சிப்பதையே அவர்கள் செய்துள்ளனர். ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் தற்பொழுது இவர்கள் யார் என்பதை நன்கு அறிந்துள்ளனர். துரதிஷ்டம் என்னவென்றால், எமது கட்சியிலுள்ள சிலருக்கு இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது விளங்காமல் இருப்பதாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -