உயிர்ப்பலிகளுக்கு முடிவு கிடைக்காதா..?

புலிப் பயங்கரவாதம் அழிக்கப்பட்டது; சிறு பான்மை சமூகத்தின் மீது இனவாதம் விதைக்கப்பட்டது (குறிப்பாக முஸ்லிங்களுக்கு எதிராக); வெள்ளை வேன் கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை என்று தினம் தினம் கெடுபுடிகள். இவைகளே கடந்த அரசாங்கத்தின் சாதனைகள். நாட்டின், சட்ட ஒழுங்குகளும் நீதியும் காவல்துறையும் சிறைவைக்கப்பட்டன. மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் இயக்கமில்லாமல் ஊமைகளாகவும் செவிடர்களாகவும் இருந்தனர்.

இவ்வாறு அதிகாரத்தில் இருந்து கொண்டு குடும்ப ஆட்சி செய்தவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் என்பதை நல்லாட்சி மறக்க கூடாது.

கொழும்பு பம்பலபிட்டியில் கடத்தப்பட்டவர் மாவனெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மொஹமட் சாகீப் சுலைமான் எதற்காக கொல்லப்பட்டார்? இதை செய்தவர்கள் யார்? இதை செய்தவர்களின் உண்மையான நோக்கம் என்ன?

சிறுபான்மை சமூகம் மீது மேற்கொள்ளப்படும் இப்படியான சம்பவங்களின் பின்புலம் என்ன என்பதை நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இனவாதத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் நாட்டின் இறைமைக்கும் பாதிப்பு ஏற்பட கூடிய இவ்வகையான கொலைகள் புலனாய்வுத்துறைக்கு விடும் சவாலாகவே காணப்படுகிறது. ஆட்சி மாற்றம் வேண்டி நல்லாட்சியை ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகள் கனவுகள், சிறிது சிறிதாக கானல் நீர் போல மாறி கொண்டு செல்கிறது.

நாட்டில் சட்ட ஒழுங்கு பேணப்படுகிறது, நீதி துறையும் காவல்துறையும் சுயாதீனமாக இயங்குகிறது என கூறி கொண்டு இருக்கும் நல்லாட்சி அரசாங்கமே இவ்வகையான கடத்தல் கொலைகளுக்கு பொறுப்பானவர்கள் ஆகும். இக்கொடூர செயலை செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். மீண்டும் இப்படியான சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இது நல்லாட்சி அரசாங்கத்திடம் மக்கள் விடுக்கும் வேண்டுகோள் ஆகும்.

மனாப் அஹமத் றிசாத்,
அக்கரைப்பற்று.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -