தம்புள்ள கிரிக்கட் விளையாட்டு மைதானத்துக்கருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச போட்டிக்கான டிக்கட் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. எனினும், இன்றைய போட்டிக்கான டிக்கட் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு முடிந்ததாகவும் இன்று டிக்கட் விற்பனை செய்யப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.