லண்டன் கடலில் காணாமல் போனவர் கரை திரும்பிய மர்மம் - அதிர்ச்சியில் மக்கள்

பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல் படையினருக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீச்சல் வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் இணைந்து பொலிஸார் மற்றும் கடலோர காவல் படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எனினும் காணாமல் போனதாக கருதப்பட்ட பெண் கடலோர காவல்படையினர் முன்னிலையில் தோன்றியதை அடுத்து தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

நீச்சல் வீரர் என்று அடையாளம் காணப்பட்ட குறித்த பெண் தற்போது பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாக கடல்வழி மற்றும் கடலோர காவல் படை முகாமை தெரிவித்துள்ளது.

கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் நீச்சல் வீரரை காணவில்லை.

பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கம்பர்ஸான்ட் கடல்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீச்சல் வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து நீருக்கு அடியில் அவரை தேடும் பணிகளில் அவசர சேவைகள் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 8 மணியளவில் கம்பர்ஸான்ட் கடற்பகுதிக்கு குறித்த நீச்சல் வீரர் சென்றதாகவும் நீண்டநேரம் ஆகியும் அவர் கரை திரும்பவில்லை எனவும் கடற்கரைப் பகுதியில் இருந்த ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீட்புப் படையினருடன் இணைந்து பொலிஸார் மற்றும் கடலோர காவல் படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை குறித்த கடற்பகுதிக்கு குளிப்பதற்காக சென்ற ஐந்து ஈழத்தமிழர்கள் கடற்கரையின் புதை மணலில் புதையுண்டு உயிரிழந்தனர். இந்த அனர்த்தத்தை தொடர்ந்து குறித்த கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் இன்று நீச்சல் வீரர் காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -