மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பயணித்த வாகனத்தின் மீது கல் வீசி தாக்கியதாக கூறப்படும் 6 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வத்தளை ஒலியாமுல்லை பகுதியில் அமைக்கப்படவுள்ள தமிழ் பாடசாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் காணி, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிரிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கலந்துக்கொண்டதன் பிறகு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மூவரில் பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை வத்தளை பிரதம பூர்ணிமா கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மூவரை பிணையில் விடுதலை செய்துள்ளதோடு மேலும் மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.