ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பகுதி முன்னாள் உதவி ஆசிரியரும் தற்போது பாதுகாப்பு அமைச்சின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சாதிக் சிஹனானின் தகப்பனார் நாகூர் அடுமை (நஜீம்) தனது 64வது வயதில் காலமானார்.
சிஹான் உட்பட ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் சிறிதுகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று (29) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் - தகவல் மகன் சாதிக் சிஹான்- 0773112561