மூன்றாவதும் பெண் குழந்தை பிறப்பு - ஆத்திரத்தில் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூர தந்தை..!

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே தொடர்ச்சியாக பெண் குழந்தைகளையே பெற்றெடுதத்தால் மனைவி மீது ஆத்திரமடைந்த தந்தை, 3 மாத பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாமோதரன்(45), அமிர்தமங்கலம் கிராமத்தில் தினக் கூலியாக பணியாற்றி வருகிறார். மூன்றாவதும் பெண் குழந்தையாய் பிறந்ததில் ஆத்திரமடைந்த தாமோதரன் தனது மனைவி அம்பிகாவிடம், குழந்தை ஜோதிலட்சுமியை கொல்லவும் அல்லது ஆதரவற்ற இல்லத்தில் கொண்டுவிடும்படி கூறியுள்ளார். இதற்கு அம்பிகா மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக பச்சிளம் குழந்தையின் தலையில் டிபன் பாக்சை வைத்து இடித்துள்ளார். அதனை பார்த்து அதிர்ந்து போய் தடுக்கச் சென்ற அம்பிகாவை பிடித்து கீழே தள்ளிவிட்டு, குழந்தையை தூக்கி சுவற்றில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை மதியம் அனைவரும் அமர்ந்து உணவு உண்ணும்போது இந்த சமபவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான தாமோதரனை கவரபேட்டை போலீசார் தேடி, தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -