இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுட்டுக்கொலை..!

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய லக்ஷர்‐இ‐தொய்பா பயங்கரவாத அமைப்பு உறுப்பினர்கள் நால்வரை பாகிஸ்தான் பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் லக்ஷர் பகுதியில் வைத்தே இன்று அதிகாலை இவர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக லக்ஷர் நகரில் இருந்து கடாபி மைதானத்திற்கு செல்லும் வழியில் இந்த பயங்கரவாத தாக்குதல் இலங்கை அணியினர் சென்ற பஸ் மீது மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இலங்கை அணி வீரர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்- தமிழ்வின்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -