பதவி விலகுகிறார் டலஸ் அழகப்பெரும...!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.  தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அவர் இதன் போது கூறினார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடம்பெறும் அநீதிகள் காரணமாக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக டலஸ் அழகப்பெரும கூறினார்.  பதவியில் இருந்து விலகியதன் பின்னர் மேலும் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குவதாக டலஸ் அழகப்பெரும இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -