இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஏறாவூரில் 500 குடும்பங்களுக்கு இலவச குடிநீர்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண சபை உருப்பினர் எம்.எஸ் சுபையிரின் வேண்டுகோளின் பேரில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள 500 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இக்குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு (21) நாளை மாலை ஏறாவூர் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் ஏ.எல் றியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் சுபையிர் கௌரவ அதிதியாகவும், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல் ஜெயினுதீன் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பிற்கான காசோலை வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -