கொழும்புத் துறைமுகத்தில் நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினர்...!

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் நிலையில், இலங்கை கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

அத்துடன், அமெரிக்க - இலங்கை கடற்படையினருக்கிடையில், கூடைப்பந்து, எல்லே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இருநாட்டுக் கடற்படையினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -